Tuesday, November 19, 2013

சாருகேசி

நான் மிகச்சிறுவனாக இருந்தகாலங்களில் வந்த சினிமாப் பாடல்களில் இளையராஜாதான் இளைஞர்களின் விருப்ப இசையமைப்பாளர். அப்போது 'பெரிசு'களாக இருந்தவர்களெல்லாம் "இவன் என்ன மியூசிக் போடுகிறான்? அந்தக் காலப் பாட்டுக்கள் மாதிரி வருமா? " என்று அலுத்துக்கொள்வார்கள். கையோடு தியாகராஜ பாகவதர் உதாரணம் காட்டப்படுவார்.தியாகராஜ பாகவதர் என்றால் உடனே "மன்மத லீலையை வென்றார் உண்டோ" முதலில் ...



எனக்கும் இந்தப்பாட்டு அந்தக் காலங்களில் பிடிக்கவில்லை. பிறகு கொஞ்சம் பரவாயில்லை போலிருந்தது. இந்நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாய் விட்டது. (இப்பாடல் ஜி.ராமநாதன் இசையில், ஹரிதாஸ் திரைப்படத்தில்(1944) வந்தது. இயற்றியவர் பாபநாசம் சிவன்)


இன்னுமொரு பாடல். எனக்கு சிறுவயதுகளில் இருந்து பிடிக்கும். அது,



இதுவும் ஜி.ராமநாதன் இசையில், ஆனால் டி.எம்,சௌந்தரராஜன் குரலில். (அந்நாட்களில் டி.எம்,சௌந்தரராஜன், தியாகராஜ பாகவதர் பாணியிலேயே பாடியே தன் இசைப் பணியைத் தொடங்கியதாகச் சினிமா இசை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளலாம்)

கேள்வி: ராஜசுலோசனாவை மயில் என்னாது புறா என்று வர்ணிப்பது பொருத்தமாக இருக்கிறது. இல்லையா?

மேலேயுள்ள இரண்டு பாடல்களும் ஜி.ராமநாதன் இசையில் வந்தன. இரண்டும் சுப்பர் ஹிட் என்பதைவிட, இரண்டு பாடல்களுக்கும் சாருகேசி ராகத்தில் உள்ளன என்பது எனக்கு முந்தாநாள்தான் தெரியவந்தது.. சாருகேசி ராகத்தை எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று யாரும் விட்டுவைக்கவில்லை.

"மலரே குறிஞ்சி மலரே" என்பது எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வந்தது.




கீழேயுள்ளதுவும் சாருகேசி இராகத்தில்தான் உள்ளது. சிம்ரன் ஓடுவதைக் கவனிக்காமல் சாருகேசியைத் தேடவும். (இசை தேவா)




எனக்கு மிக மிகப் பிடித்த சாருகேசி கீழேயுள்ளதுதான். "ஆடமோடி காலடே". ஆக்கியது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் (1767-1847). இதிலிருந்துதான் சாருகேசி பற்றித் கூகிளில் தேடவெளிக்கிடக் கிடைத்தவைதான் மேலேயுள்ளவை. மற்றும்படிக்கு என் சங்கீத அறிவு ஒரு பந்திக்குள் அடங்கிவிடும்.

(வயலின் லால்குடி ஜெயராமன், மிருதங்கம் காரைக்குடி மணி, கஞ்சிரா ஜி.ஹரிசங்கர்)




(ஆரம்பத்தில் அலுப்படித்தால் 3:59 இலிருந்து கேட்கவும். பிறகு, பிடித்திருந்தால் மீண்டும் முழுதாகக் கேட்கலாம் :-))

-------------------------

நன்றிகள்: மேலேயுள்ள லால்குடி அவர்களின் வயலினை ஃப்பேஸ்புக்கில் பகிர்ந்த திரு ஆறுமுக வேல்முருகன் அவர்களுக்கு.